Wednesday, January 14, 2009

வாழ்க்கை "போராட்டத்திற்கு" இனி வழியே இல்லை...!







வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.....என்ற பாடலின் வரிகளை வலு கச்சிதமாக எம்மினம் புரிந்து கொண்டுள்ளது.ஒரு புறம் கொடூர யுத்தம்.இதனால் அணு அணுவாக அல்லது அங்குல அங்குலமாக எம்மினம் அழிந்து கொண்டு இருக்கிறது. மறு புறத்தில் காட்டிக் கொடுப்புகள்,கைதுகள், காணமல் போதல் என பல விசயங்கள்.ஆனால் "எண்ணித் துணிக" என்ற வசனத்தை புது அர்த்தத்துடன் பார்க்கிறது எம்மினம்."என்ன வேணுமென்டாலும் பண்ணுங்கடா நாங்கள் வாழுவம்" என மார் தட்டி வீறு நடை போடுகிறது எம்மினம்.

வேறு ஒன்றுக்கும் இல்லை இந்த வீறு நடை. இன்றைய பொங்கலுக்கு பொருட்கள் வாங்கத்தான் நேற்று தினம் இந்தச்சனம் வீறு நடை போடுகிறது.இது வழமையானது தானே இவன் ஏன் புதுசா பீதிய கிளப்பிறான் என யோசிக்காதிஙக.ஒரு சில விசயங்கள் தான் என்னை எழுதத் தூண்டியது.


அதில் முதலாவது விலைக்கு விற்கப்பட்ட மா இலை (மா விலையால் புட்டும் பாணும் சாப்பிட முடியாமல் தவிக்கும் எம்மினத்தின் ஒரு பகுதி மா இலைக்கு விலை கொடுத்த சோகக்கதையை நான் எப்படிச் சொல்ல) பத்து ரூபா கொடுத்தால் ஏழு இலையாம்.(புழுக்குத்தல்,சருகு இலைகளை தவிர்த்து நல்ல இலைகளை தேர்ந்தெடுக்கலாம்) காலி வீதியில் நான் கண்ட முதல் காட்சியே சூடு பிடித்த மாவிலை வியாபாரம் தான்.(பேரம் பேசி பெருமையோடு வாங்கியோரும் உண்டு) மாவிலையை காசுக்கு வித்து எல்லோரையும் மாங்காய் மடையன் ஆக்கியிருக்கிறார்கள்


வாழையிலை
, கரும்பு, மர அகப்பை இப்படி ஏராளம். ஆனால் இதெல்லாத்தையும் விட பெரிய கொடுமை இரண்டாவது விசயம்.அது என்னன்னா இஞசி மஞசள் வித்துக்கொண்டிருந்த இடத்தடியில தாய்க்கும் மகளுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல். மகள் தாயிடம் கேட்கிறா

















"அம்மா இத ஏன் வாங்க வேணும்??" தாய் பதில் சொல்ல முதல் இஞசி மஞசள் வித்துக்கொண்டிருந்த ருவான் "உங்கட சைவ ஐயா தான் சொன்னாரு.பானையில வச்சு கட்டினு அக்கனுமா." (அடி இஞசி வாங்கிற மங்கி இது கூடத்தெரியல்ல உனக்கு பொங்கல் ஒரு கேடா என, தலையில நாலு குட்டு குட்டி கேக்கணும் போல தான் இருந்திச்சு)எனச் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது (சும்மா மண்டைக்குள்ளால போச்சுது).



இப்படி
எங்களையும் எஙகள் சாத்திர சம்பிரதாயங்களையும் சுழிவு நெழிவுகளையும் நன்கு தெரிந்து கொண்டு, எங்களிடம் காசை வாங்கி எங்களையே அடிக்கும் வித்தையையும் தெரிந்த ருவான் போன்றவர்களுடைய சமிபத்திய சந்தோசம், கிளிநொச்சி கைப்பற்றியதற்கு நடு ரோட்டில் பொலிசாரோடு சேர்ந்து வெடி போட்டதுதான். (புது வருசத்துக்கு நாங்க வெடி கொழுத்தினா மக்களுக்கு இடைஞசல், இதையே சும்மா நாளில நீங்க செய்தா மக்களுடைய ஆதரவோ?).நாங்க எல்லாம் எங்கட எங்கட ஊருக்குப் போனால். சோத்துக்கு சிங்கி அடிக்கேக்கை தெரியும்.இதுவும் நடக்கும் என்று நீங்களும் நம்புறீங்களா???

எது எப்படியோ
"பொங்கலே பொங்கல்" என்கின்ற வார்த்தைகள்
"கோவிந்தா கோவிந்தா" என கேட்காமல் விட்டால் சரிதான்.


No comments: